தினம்தினம் மதுவின் மயக்கத்தில்
தன்னையே மறந்துப்போனவனே...!
உன் வாலிபம் மரித்துக்கிடப்பது
இந்த மதுக் கோப்பையிலா..!
வேர்பிடித்து அரும்பும் போதே
அறுந்து விடுவதா வாழ்க்கை...
உன் வசந்தத்தின் துவக்க சங்கமம்
வீதியில் கிடக்கும் பலி பீடத்திலா...
எல்லா எதிர்காலமும் எரிந்து போகும்
முறையற்ற உன் தடுமாற்றத்தில்...
வாழ்க்கையென்ற வாலிபப் பூங்காவில்
நீ பிணங்களோடு பிணங்களா...
உனக்கு மகிழ்ச்சியும் துக்கமும்
ஏன் போதையின் போதனையில்..?
நம்பிக்கையென்ற நாளைய பொழுதின்
முளைவிடும் இளைய நாற்றே...!
போதையின் சுமையினை
கொஞ்சம் நிறுத்திவை
நம்பிக்கையின் துடுப்பை பழக்கப்படுத்து
உன் நெடுந்தூர பயணத்திற்கு...
உன் வைகறையை
பூபாளத்தோடு பூக்கவிடு...
அன்று உன் காலடியில்
காலம் பணியும்...
No comments:
Post a Comment